மின்சாரம் தாக்கி இருவர் பலி

கண்டியில் இருவர் வியாழக்கிழமை, 01 நவம்பர் 2012  வியாழக்கிழமை பகல் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளதுடன், சிறுமியொருவர் படுகாயமடைந்துள்ளார். 

கண்டி, மடவல பசார் பகுதியைச் சேர்ந்த 58 வயதான தாயொருவரும் 20 வயதான அவரது மகளொருவருமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். 7 வயதான சிறுமியே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்மாணியுடன் கட்டப்பட்டிருந்த கொடியில் ஆடைகளை உலர்த்துவதற்காக போட்டபோது, இவர்கள் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

இவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்துகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments